Tuesday, October 5, 2010

எடியூரப்பா: அடேங்கப்பா!......

தேசபக்தியும் தெய்வபக்தியும் இந்துக்களின் முன்னேற்றத்தையுமே இலட்சியமாகக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் கர்நாடக முதல்வர் எடியூரப்பா சர்வசாதாரண தலைவரா என்ன? இந்துக்களின் முன்னேற்றத்தைக் கொஞ்சம் சுருக்கி கன்னடர்களின் முன்னேற்றத்திற்காக ஒகேனேக்கல்லுக்குள் நுழைந்து ஓட்டுப் பொறுக்கி முதல்வரான கன்னடர்களின் பிதாவாயிற்றே!

இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா. மேற்கண்ட அனைத்து கொள்கைகளையும் நோட்டுக்களாக மாற்றிக்கொள்ளுகின்ற அரும்பணியைச் செய்துகொண்டிருக்கிறார். இந்துராஜ்ஜியம் அமைக்கவிருப்பதாக வாஜ்பாய் முதல் கட்காரி வரை பேசிவருகிறார்களே, அந்த இந்துராஜ்ஜியத்தின் முன்னோட்டம்தான் கர்நாடகாவும் எடியூரப்பாவும்.

கர்நாடகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திராஜ்ஜியத்தின் சந்துபொந்துகளிலும் கூட அப்பட்டமாக மலிந்திருக்கிறது ஊழல். சுரங்க மாஃபியாக்களான ரெட்டி சகோதரர்கள் முதல் எடியூரப்பா வரை சங்கபரிவார அரசுகளின் அதிகார அடுக்கள் அனைத்தும் கரன்சியால் நிரம்பிவழிகின்றன.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் மறுப்பதற்கு இடமின்றி சந்திசிரித்து விட்டபடியால் இப்போது அதனை இல்லையென்று மழுப்பி நியாயப்படுத்துவதற்கு சட்டமன்றம் பயன்படுகிறது.  சட்டமன்றமும் நாடாளுமன்றமும் பங்கெடுக்காத ஊழல் எந்த நாட்டில் இருக்கிறது. இதுதான் முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் இலட்சனமாகும். மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தை ஊழல் பற்றி விவாதிப்பதற்காகவே ஏற்பாடு செய்திருக்கிறது கர்நாடக சட்டமன்றம். முடிவு நாம் இதுவரை அறிந்திராததாகவா இருந்துவிடப்போகிறது.

சட்டமன்றமும் நாடாளுமன்றமும் ஊழலின் பிறப்பிடமாக மட்டுமல்ல ஊழல் வழக்குகளை சந்தடியில்லாமல் அடக்கம் செய்துவிடக்கூடிய அரசியல் சுடுகாடாகவும் செயல்படுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்கள் மன்றத்தில் பேசமுடியாத விஷயமாக இது வளர்ந்துவிட்டது. பேசினால் செருப்பும் துடைப்பமும் முகத்தைப் பதம்பார்த்துவிடக் கூடிய அபாயமிருப்பதால் இவ்வழக்கு சட்டமன்றத்திற்குள் பாதுகாப்பாக தம்மைப் பதுக்கிக்கொள்ள முயலுகிறது. சட்டமன்றத்திற்குள் உள்ள ஓட்டுப்பொறுக்கிகளின் யோக்கியதையும் அதற்கொரு சாதகமான அம்சமாகத்தானே இருக்கிறது! ஒரு ஓட்டுப்பொறுக்கி மற்றொருவனைப் பார்த்து குற்றம் சாட்டக்கூடிய யோக்கியதையோடா இருக்கிறான். ஊழலில் கூட்டாகப் பங்கெடுத்துவிட்டு அரசியல் மேடைகளில் மட்டும் எதிரெதிர் மேடைகளிலிருந்து குரைத்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகள் ஒருவனையொருவன் தண்டித்துக் கொள்வான் என்று எதிர்ப்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

காங்கிரசு, பா.ஜ.க., போலிகம்யூனிஸ்டுகள் போன்ற தேசியக் கட்சிகள் முதலாக அந்தந்த மாநிலக் கட்சிகள்வரை ஊழலில் பங்கெடுக்காத கட்சி எது? இந்த ஓட்டுப்பொறுக்கிச் சாக்கடையில் சங்கமித்திருப்பதால்தான் அனைத்து கட்சிகளுக்கும் ஊழல் ஒரு பொதுவான அம்சமாக வளர்ந்திருக்கிறது. இனி வேலிக்கு சாட்சி சொல்ல வரும் இந்த ஓட்டுப்பொறுக்கி ஓணான்களின்  நாடகங்களைத் தொடர்ந்து சில நாட்களுக்கு நாம் பார்க்கலாம்!

பூனை கருவாட்டை வெறுத்துவிடுமா, இந்த ஓட்டுப்பொறுக்கி நாய்கள் ஊழல் பிஸ்கட்டுக்கு மயங்காமல் இருந்துவிடத்தான் போகிறார்களா? பரிசீலிப்போம் நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மதிப்பீடுகளை.

புறக்கனிப்போம் இந்த ஊழல் அரசியல் கட்டமைப்பின் அடையாளமான நாடாளுமன்றத்தையும் அதனைப் புனிதப்படுத்துவதற்காக நடத்தப்படும் தேர்தல் நாடகங்களையும்! நன்றி!!

=================================================

No comments:

Post a Comment