Friday, October 8, 2010

தெருநாய்ச் சண்டைகளும், அரசியல் ஓலங்களும்!

திருமண மண்டபங்களின் வெளியே வீசப்பட்டு கிடக்கும் எச்சில் இலைமேட்டின் மீது அந்தந்த பகுதியின் சொறிநாய்கள் சங்கமித்து சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். அச்சண்டையின் ஓலம் காதைப் பிளந்துகொண்டு அப்பகுதியின் அமைதியைக் கெடுத்து அனைவரது கவனத்தையும் அதன் பக்கம் குவித்துக்கொள்ளும். இந்த தெருநாய்ச் சண்டைகள் இல்லாத எச்சில் இலை மேடுகளே இருக்க முடியாது.

அதேபோல்தான் நமது நாடாளுமன்ற, சட்டமன்ற கூட்டத்தொடரின் போதும் தேர்தல் வேளைகளிலும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் லாவனி ஓலம் நாய்சண்டையை விடக் கேவலமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இவர்களுடைய ஏச்சும் பேச்சும், போலிச்சண்டைகளும் மக்கள் பிரச்சினை- களை திசைத்திருப்புவதற்குத்தான் பயன்படுகிறதேயொழிய அவற்றைத் தீர்ப்பதற்குப் பயன்படுவதில்லை. காங்கிரசு முதல் போலிகம்யூனிஸ்டுகள் வரை அனைத்து ஓட்டுப் பொறுக்கிகளின் அரசியல் சவடால்களும் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக நடத்தப்படுகின்ற நாடகங்களாகத்தான் இருக்கின்றன.

மக்கள் விரோதக் கொள்கைகள் அனைத்திலும் கூட்டாகப் பங்கெடுத்து, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் மீது வறுமையையும், பசியையும், பட்டினியையும் திணித்துவரும் இவர்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளைவிட ஒற்றுமைகளே ஏராளமாக இருக்கின்றன. அவ்வொற்றுமையை, மோசடியை, அயோக்கியத்தனத்தை மூடிமறைத்துக் கொள்ளும் வகையிலேயே ஓட்டுப் பொறுக்கிகள் இந்த நாய்ச்சண்டைகளை நடத்திக்கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு நாய்சண்டையை, நாடாளுமன்றத்திற்குள் கனிசமான எண்ணிக்கையில் ‘நாய்களை’க் கொண்டிருக்கும்  பா.ஜ.க. வரும் கூட்டத் தொடரில் தொடங்கவிருப்பதாக நேற்றைய தினம் அறிவித்திருக்கிறது.

சமீபத்தில் பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சுஷ்மா சுவராஜ் மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.)யை ஒருதலைப் பட்சமாகவும், எதிர்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கத்தோடும் பயன்படுத்திவருவதாகக் குற்றம் சாட்டினார். சீக்கியப் படுகொலையில் நேரடித் தொடர்புடைய காங்கிரசு ரவுடிகளான ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோர் மீதான விசாரனையை முடக்கி அவர்களைக் காப்பாற்றும், மத்திய புலனாய்வுத்துறை, அத்வானியையும் நரேந்திரமோடியையும் இன்னபிற பா.ஜ.க. தலைவர்களையும் விசாரனைக்கு அலைக்கழிப்பதாக அழுது அரற்றுகிறார், சுஷ்மா.

“அது மத்திய புலனாய்வுத்துறையாக அல்லாமல் காங்கிரசு புலனாய்வுத் துறையாகச் செயல்படுகிறது” என்று முறையிடுகிறார், பா.ஜ.க.வின் தலைவர் நிதின்கட்காரி. காங்கிரசுக்கும் மத்திய புலாய்வுத்துறையினருக்கும் எதிராக நரேந்திரமோடி ஒரு தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருப்பதாக வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள், இதர பா.ஜ.க. தலைவர்கள்.

சும்மாவா, இந்த மத்திய புலனாய்வுத்துறையின் மூலம் மன்மோகன் கொடுத்த நெருக்கடியின் காரணமாக அனுவிபத்து இழப்பீட்டு மசோதா மீதான பா.ஜ.க.வின் சவடால்களை முடக்கி அந்த மக்கள் விரோத மசோதா அனைத்து கட்சிகளின் ஆதரவோடும் வெற்றிபெற்றதே, இதுபற்றி பா.ஜ.க. உள்ளிட்ட எந்த ஒரு ஓட்டுப் பொறுக்கியும் மூச்சுகூட விடுவதில்லை.

பா.ஜ.க.வின் அரற்றல்கள் ஒருபுறமிருக்க, போலிகம்யூனிச கட்சியான ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் பிரகாஷ் காரத்தும், மத்திய புலனாய்வுத்துறையை காங்கிரசு அரசு தமது கட்சியின் யோக்கிய சிகாமணிகளைப் பழிவாங்குவதற்காக ஏவிவிட்டிருப்பதாக அழுதுபுலம்புகிறார். 400 கோடி லாவலின் ஊழலில் சிக்கிய கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராயி விஜயன் வேண்டுமென்றே பழிவாங்கப்படுவதாகப் புலம்புகிறார். மறுகாலனியாக்க அடியாளாகச் செயல்பட்டு நந்திகிராம மக்களை அரச பயங்கரவாதத்தை ஏவி நரவேட்டையாடிய புத்ததேவ் பட்டாச்சார்யா மீதான, பெயரளவிலான விசாரனைகளைக் கூட, காங்கிரசு பழிவாங்கும் நோக்கத்தோடு மேற்கொள்வதாக ஒப்பாறி வைக்கிறது, மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ.

இதர பிராந்தியக் கட்சிகளின் தலைவர்களான மாயாவதி, முலாயம்சிங், சிபுசோரன், ஜெயலலிதா உள்ளிட்ட ஏராளமானோர் மத்திய காங்கிரசு அரசு, சி.பி.ஐ-யை தமக்கு எதிராக ஏவி வஞ்சம் தீர்த்துக் கொள்வதாக முறையிடுகின்றன.

இப்படிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளையும் மீறியே தமது கட்சியும் தாமும் இந்த மக்களுக்காகத் தொண்டாற்றி வருவதாகவும், இதனை முறையாக தாம் எதிர்கொள்வதாகவும் மறுபுறம் யோக்கிய தோரணையில் சவடால்களையும் அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களது அனைத்து புலம்பல்களும் தாம் விசாரிக்கப் படக்கூடாது என்பதிலிருந்துதான் வருகிறதேயொழிய தாம் குற்றமற்றவர்கள் என்ற நிலையிலிருந்து இவர்கள் பேசுவதில்லை.

மத்திய புலனாய்வுத்துறையின் அயோக்கியத்தனமான செயல்பாடுகள் குறித்து இவர்கள் வாய்திறந்து பேசிவருவது தமது பிரச்சினைகள், தமது தனிப்பட்ட பாதிபுகள்  என்ற வரம்பிற்குட்பட்டே இருந்துவருகிறது.  இதே மத்திய அரசும், சி.பி.ஐ-யும் வெகுமக்களைப் பாதிக்கின்ற வகையில் நடந்துகொள்ளுகின்ற போது, பெரும்பாண்மையான அப்பாவி மக்களுக்கு வெளிப்படையாகத் துரோகமிழைக்கும் போது இந்த ஓட்டுப் பொறுக்கி நாய்கள் வாய்திறப்பதே கிடையாது.

சீக்கியப் படுகொலைக் குற்றவாளிகளைப் பாதுகாத்து அநீதியிழைத்த மத்திய அரசைக் கண்டித்து ப.சிதம்பரத்தின் மீது செருப்பை வீசிய சீக்கிய இளைஞ்ர்  மீது போலீசு நாய்கள் ஏவிவிடப்படும்போது இந்த ஓட்டுப்பொறுக்கி நாய்கள் தத்தமது வால்களைச் சுருட்டி கால்களுக்கு இடையில் அடைத்துக்கொண்டு பம்மி வேடிக்கப்பார்த்து நின்றன. மத்திய அரசுக்கு எதிராக நியாயவாதம் பேசுகின்ற எந்த ஒரு ஓட்டுப்பொறுக்கியும் அந்த சீக்கிய இளைஞரைக் காப்பாற்ற முயலவில்லை.

ஒரே இரவில் பல்லாயிரம் பேர் பிணமக்கப்பட்ட போபால்  படுகொலை தொடர்பான  வழக்குகளில் மத்தியில் ஆட்சிபுரிந்த (காங்கிரசு, பா.ஜ.க., உள்ளிட்ட) அனைத்து ஆட்சிகளுமே இந்த மத்திய புலனாய்வுத்துறையை பொதுமக்களுக்குத் துரோகமிழைக்கும் வகையிலும், அமெரிக்க ‘ஆண்டை’யைக் காப்பாற்றும் வகையிலும்தான் பயன்படுத்தியது. குற்றவாளியை விசாரனைக் கூண்டில் கூட ஏற்றாமல் துரோகமிழைத்த சி.பி.ஐ, கூண்டிலேற்றப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களையும் மறைத்து அவர்களையும் தண்டனைகளிலிருந்து காப்பாற்றியது. இது தலைமுறைகளாக பாதிப்புகளைச் சுமந்துவரும் லட்சக்கணக்கான போபால் மக்களுக்கு மத்திய புலனாய்வுத்துறையும், மத்திய-மாநில அரசுகளும் சுமார் கால்நூற்றாண்டுகால அலைக்கழிப்புக்குப் பிறகு இழைத்த துரோகமாகும்.

இந்தத் துரோகம் குறித்து கேள்வியெழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கி, காங்கிரசு கயவாளிகளை அம்பலப்படுத்தும் விதமாகச் செயல்பட்ட ஒரேயொரு யோக்கியனின் பெயரை இந்த ஓட்டுப்பொறுக்கி பட்டியலில் காட்டுங்கள் பார்க்கலாம்! பா.ஜ.க., போலிகம்யூனிஸ்டு, திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட எந்தக் கட்சியின் தலைவனும் இதுபற்றி இன்றுவரை வாய்திறக்கவில்லை. ஏனெனில் இவர்கள் எல்லோரும் அமெரிக்கக் கொலைகாரன் ஆண்டர்சனின் விட்டையைத் தின்று வளர்ந்தவர்கள்தான்.

நந்திகிராமத்தில் புத்ததேவ் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு நூற்றுக்கணக்கான அப்பாவி விவசாயிகளைக் கொண்று புதைத்தது யாருக்காக? போபால் படுகொலையை அரங்கேற்றிய அதே யூனியன் கார்பைடு (டௌ கெமிக்கல்ஸ்)-க்காகத்தான். பா.ஜ.க.வின் தலைவர்களும் காங்கிரசின் தலைவர்களும் இதே, நாசகார  டௌ கெமிக்கல்ஸின் வழக்குரைஞர்களாக வெளிப்படையாகச் செயல்பட்டவர்கள்தான். ஆக, ஆண்டர்சன் வீசிய எலும்புத்துண்டைச் சுவைக்காதவன் எவனும் இந்த நாடாளுமன்றத்திற்குள் இல்லாத காரணத்தினால்தான், போபால் மக்களுக்கு சி.பி.ஐ. இழைத்த துரோகம் குறித்துப் பேச ஆளில்லாமல் போய்விட்டது.

எனவே, இந்த நாடாளுமன்றத்தில் உழலும் ஓட்டுப்பொறுக்கிகளின் ஓலம், அது பா.ஜ.க.வாக இருக்கட்டும் ‘மார்க்சிஸ்ட்’-ஆக இருக்கட்டும் அனைத்துமே மக்கள் பிரச்சினைகளை மறைப்பதற்கான கூப்பாடுகள்தான். மக்களாகிய நாம் இந்த ஓலத்தை தெருநாய்ச் சண்டைகளை விடக் கீழானதாகக் கருதி புறக்கனிக்க வேண்டும்.

 தெருநாய்களின் ஓலத்தைச் சகித்துக்கொள்ள முடியாத அமைதி விரும்பிகள் கல்லெடுத்து நாய்களைத் துரத்தியடிப்பதைப் போல, இந்த ஓட்டுப்பொறுக்கி நாய்களையும் வீதிகளில் அடித்துத் துரத்தவேண்டும்.

அப்போதுதான் தம்மை அழுத்தி வதைக்கின்ற உண்மையான பிரச்சினைகள் அனைத்தும் மக்களால் உணர்ந்து கொள்ளப்படும். அவற்றுக்கெதிராக மக்கள் அணிதிரள்வதற்கும் வழியமைத்துக் கொடுக்கும். இந்த இழிவான சமூக அமைப்பு உடைத்து நொறுக்கப்பட்டு உண்மையான ஜனநாயகம் கட்டியெழுப்பப்படும். நன்றி!


==================================================



2 comments:

ராவணன் said...

இந்த மயிர்புடுங்கி மாவோவின் மூத்திரச்சந்து மருதய்யன் கும்பலின் தொல்லை தாங்கலடா சாமி...

letsdebate...இதற்கு அந்த மூத்திரச்சந்து மருதய்யன் ரெடியா? என்னிடம் விவாதிக்க அந்த அய்யன்.. மருதய்யன் ரெடியா?

வானம் said...

கட்டுரையில அவ்வளவு கேட்டுருக்குதே, அதுல ஏதாவது ஒரு விசயத்துக்கு பதில் சொல்லிட்டு உன் debate-ட ஆரம்பிடா வெண்ண.

Post a Comment